Friday 22 December 2017

சுரேசுக்கு இன்று முதல் விருது


          
    எனது நண்பன் சுரேசுக்கு தான் எழுதிய முதல் நாவல் ஒளிர்நிழல் ,முதல் சிறுகதை தொகுப்பு நாயகிகள்,நாயகர்கள்  ஆகியவற்றுக்காக சிறந்த அறிமுக எழுத்தாளர் விருதை வாசகசாலை, தமிழ் இலக்கிய விருதுகள்  பெருமையுடன் வழங்குவதாக அறிவித்துள்ளது கண்டு எல்லையில்லா மகிழ்ச்சியடைந்தேன் .வாழ்த்துக்கள் சகோதரா .


  சுரேஷை நான் கொல்லிமலையில் ஜெயமோகன் அவர்கள் நடத்திய  புது வாசகர் சந்திப்பில் முதன்முறையாக சந்தித்தேன் .அது முதல் தொடர்கிறது அவருடன்  நட்பு .

  ஜெயமோகனின் தளத்தில் வரும் சுரேசின் கடிதங்களின் மொழி என்னை மெய்சிலிர்க்க வைக்கும் .பெருஞ்சுழி என அவரது இணைய பக்கத்தில் எழுதினார் .
   
அப்போதே என்னையறிந்தவர்களிடம் நான் சொல்லிகொண்டிருந்தேன் .தமிழின் மிக முக்கியமான படைப்பாளி உருவாகிறார் என .
  அதை அவரது முதல் நாவல் ஒளிர்நிழல் உண்மையாக்கியது .

   கடந்த வாரம் நடந்த விஷ்ணுபுரம் இலக்கிய விழாவில் ஒரு அமர்வில் வாசகர்களை சந்திக்கும் நல்வாய்ப்பை பெற்றார் .அது அவரது முதல் மேடை .என்னால் அதில் கலந்து கொள்ள இயலாமல் போயிற்று .
  
   இந்த வாரம் அவரது முதல் படைப்புக்கான விருதை பெறுகிறார் .நண்பன் சுரேசுக்கு எனது வாழ்த்துகளும் அன்பும் .உனக்கு நண்பன் என்பதில் பெருமைகொள்கிறேன் .
ஷாகுல் ஹமீது ,
23-12-2017

  

No comments:

Post a Comment